Saturday, December 25, 2021

Shiva Guru Spark Vasi yoga

 


உயிர் பிரியும் போது தச வாயுக்களின் பங்கு :


உடலை விட்டு , இந்த இடத்தில் உயிர் பிரிய வேண்டும் என முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் உயிர் உடலை விட்டு பிரியும்.


மனித உடலில் பத்துவித வாயுக்கள் உண்டு . இவை தச வாயுக்கள் எனப்படும்.


1. உயிர் காற்று. (பிராணன்)

2. மலக்காற்று. (அபானன்)

3. தொழில் காற்று. (வியானன்)

4. ஒலிக்காற்று. (உதானன்)

5. நிரவுக்காற்று.( சமானன்)

6. தும்மல் காற்று. (நாகன்)

7. விழிக்காற்று. (கூர்மன்)

8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்)

9. இமைக் காற்று. (தேவதத்தன்)

10. வீங்கற் காற்று. (தனஞ்சயன்)


உயிர் வெளியே புறப்படும் நாள் , நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செல்களும் முடக்கப்பட்டு, எல்லாவித வாயுக்களின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும்.


உதாரணமாக . . . .

ஒரு வீட்டை நாம் காலி செய்யும்போது எப்படி எல்லா பொருள்களையும் ஒழுங்காக அடுக்கி கட்டி கொண்டுவந்து நடு வீட்டில் வைத்து பின் அங்கிருந்து சரியாக எண்ணி ஒவ்வொன்றாக வெளியே கொண்டு செல்வது போல , நமது அனைத்து அவயங்களும் ஒவ்வொன்றாக முழுச் செயலையும் , ஒவ்வொன்றாக நிறுத்தி , நமது நடுநெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும்.


சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும் , இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும் , மூத்திர வாசல் வழியாகவும் , காதின் வழியாகவும் , மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும் .


ஒன்பது காற்றும் நிறுத்தப்பட்டு , அவயங்களும் முழு நிறுத்தம் கண்டு , எந்த வழியாக உடலை விட்டு உயிர் வெளியேற வேண்டுமோ அந்த வழியாக தனஞ்சயன் என்ற அந்த வாயு மற்றவற்றையும் வெளியே அழைத்து செல்லும்.உயிர் பிரியும் . 


மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும்போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் சேர்ப்பிக்கும் வேலையும் அந்த தனஞ்சயன் செய்வது தான் .


தச வாயுக்களின் சுற்று:


1. பிராணன் - மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடல், பூச உதவமு குரல்வளையில் உள்ளது. கை,கால்களை வேலை செய்ய பெரு விரல் உள்ளது.


2. அபானன் - சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும்.குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும்.


3. வியானன் - தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையாபொருளில் உருப்புக்களைநீட்ட மடக்க உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக்காக்கும்.


4. உதானன் - உணவின் சாரத்தை கொண்டு செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு.


5. சமானன் - நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது.


6. நாகன் - அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தல் துப்புதல் ஆகிய வேலை செய்யும்.


7. கூர்மன் - மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண்திறந்து மூட, கண்ணீர் வர வேலை செய்யும்.


8. கிருகரன் - நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டுபண்ணும், பசி வர வைக்கும், செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண.


9. தேவதத்தன் - சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல்.


10. தனஞ்செயன் - மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல், இறந்த மூன்றாம் நாள் தலை வழியாகவெழியே செல்லுதல்.


குழந்தை கருவில் உற்பத்தியாகும் போது தச வாயுக்கள்தான் அவற்றின் வளர்ச்சியை நிர்மானிக்கின்றன.


இந்தப் பத்து வாயுக்களின் மீதும் ஆளுமை கொண்டுவந்து பிறப்பு இறப்பை  கடப்பதே முக்தி என்று அழைக்கப்படுகின்றது .


இதற்கு உதவுகின்ற கல்வியே சாகாக்கல்வி. இந்த  கல்வியில் வரும் தசகாரிய வாசி யோகப் பயிற்சிதான் உண்மையான வாசியோகப் பயிற்சி 


#ஓம்நமசிவாய!


Thursday, December 9, 2021

Pancha boothas

 

தெரிந்து கொள்ளுங்கள்

             ஐந்து ஐந்து ஐந்து !!!💢💢💢💢


(1) பஞ்ச கன்னியர்

              அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.


(2) பஞ்சவாசம்

              இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.


(3) பஞ்சாமிர்தம்

                சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.


(4) பஞ்சபாண்டவர்

                தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.


(5) பஞ்சசீலம்

                கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.


(6) பஞ்சதிராவிடர்

               தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர்.


(7) பஞ்சபட்சி

            வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.


(8) பஞ்சபுராணம்

             தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.


(9) பஞ்சரத்தினம்

               வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.


(10) பஞ்சவர்ணம்

              வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.


(11) பஞ்சாங்கம்

                கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.


(12) பஞ்சமூலம்

                   செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.


(13) பஞ்சபாதகம்

                    பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.


(14) பஞ்சபாணம்

                    முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.


(15) பஞ்சாயுதம்

                     சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.


(16) பஞ்சபரமோட்டி

                   அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள்.


(17) பஞ்சசிகை

                தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.


(18) பஞ்சதேவர்

                பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.


(19) பஞ்சஸ்தலம்

                காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.


(20)  பஞ்ச பூதங்கள்

                நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்...!!!


            

Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...