Sunday, April 28, 2024

clearing Diseases from Body

 உங்களுக்கு வரும் உடல் வலிகளையும் நோய்களையும் உங்கள் எண்ணத்தாலேயே நீக்க முடியும் - பயிற்சி


படம் 1 – துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தியை உங்கள் உடல் உறுப்புகளில் பெருக்கச் செய்யுங்கள்


பிறருடைய கஷ்டங்களையோ, நஷ்டங்களையோ மற்றும் பல நிலைகளைப் பார்த்தோம் என்றால் நாம் அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும்?


படத்தில் (படம் – 1) காட்டியபடி காதிலே கையை வைத்துக் கொள்ளுங்கள்.


“ஓம் ஈஸ்வரா குருதேவா” உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்ற இந்த உணர்வவை உடல் முழுவதும் எண்ணிச் சொல்லிக் கொண்டயிருங்கள்.


1.இதை அங்கே பாய்ச்சி

2.உங்கள் செவிக்குள் கொடுத்து

3.இந்த உணர்வுகளைப் பரப்புங்கள்.


நீங்கள் இந்த மாதிரிச் சொன்னீர்கள் என்றால் இந்த உணர்வலைகள் அங்கே வரும்.


உடலில் எங்கெல்லாம் வலி இருக்கின்றதோ…, அந்த இடங்களிலெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படரவேண்டும் என்று இதே போன்று சொல்லி “நினைவைச் செலுத்தினால்… உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்”.


உங்கள் இருதயத்தில் படபடப்பு வந்தால் இதே மாதிரி கையை வைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயம் முழுவதும் படரவேண்டும், எங்கள் இருதயத் துடிப்பு சீராக அமைய வேண்டும் என்று இந்த உணர்வினை எடுக்க வேண்டும்.


இன்றைய விஞ்ஞான உலகில் பெரும் துயரங்களும் தொல்லைகளும் வந்து கொண்டிருக்கும் பொழுது இதைப் போல உங்கள் உணர்வுக்குள் உங்களுடைய சொல்லைச் செவிகளைக் கொண்டு


1.அந்த அருள் உணர்வின் தன்மையை உந்தச் செய்து,

2.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலின் வீரிய சக்தியை உங்கள் உடல் உறுப்புகளில் பெருக்க இது உதவும்.


இதைப் போன்று, உடலில் எந்த வலி வந்தாலும் சரி, “ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று உங்கள் உயிரை எண்ணி வலி எடுக்கின்ற பக்கம் கண்ணின் நினைவைச் செலுத்தி உடலில் உள்ள வலி நீங்கவேண்டும் என்று சொல்லுங்கள்.


எங்கள் உடலில் உள்ள வாத நீர், பித்த நீர், விஷ நீர் அனைத்தும் இறங்க வேண்டும், “தரையிலே இறங்க வேண்டும்” என்று நீங்கள் எண்ணுங்கள். இவ்வாறு நீங்கள்

1.உங்கள் நினைவுகளை உங்கள் உடலில் வலி உள்ள இடங்களுக்குச் செலுத்தச் செலுத்த,

2.அந்த ஆற்றல்மிக்க உணர்வுகளை நீங்கள் நுகர,

3.உங்கள் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த,

4.துரித நிலைகள் கொண்டு தீமையின் உணர்வுகளை நீங்கள் மாற்றி அமைக்க முடியும்.

5.வேதனையிலிருந்து விடுபட முடியும்.


அருள் வாக்குப்படி “நீங்கள் இப்படிச் செய்யுங்கள்” என்று சொல்கின்றேன். யாம் சொன்ன முறைப்படி நீங்கள் இதைச் செய்தால் உங்கள் உணர்வுகள் உடலுக்குள் பாய்ந்து இதெல்லாம் வாக்குப்படி “சித்தம்தான்”.


யாம் கொடுக்கும் இந்த அருள் வாக்குகள் உங்களுக்குள் பதிவானபின் இதைச் செய்தால் உங்களுக்குள் வரும் எத்தகையை தீமைகளையும் அகற்றும் வல்லமையை நீங்களே பெறுகின்றீர்கள்.


ஆகவே, இதையெல்லாம் ஒவ்வொரு நொடியிலும் எடுத்துப் பழகுங்கள். 


படம் 2 – உங்கள் உணர்வே டாக்டர் ஆகும்


சிறிது நேரம் சுவற்றில் கையை வைத்துக் கொண்டு (படம் 2) அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி, எங்கள் உடலில் உள்ள நஞ்சின் தன்மைகள் (நோயை உருவாக்கும் உணர்வுகள்) நீங்க வேண்டும் என்று ஏங்கி இருந்தால் அது அனைத்தும் நீங்கிவிடும் (இறங்கிவிடும்).


உங்கள் உணர்வே டாக்டர் ஆகும். நீங்கள் டாக்டரிடம் போகவேண்டியதில்லை. கூடுமான வரைக்கும் சில சிரமங்களை மாற்றி அமைக்க முடியும்.


ஒவ்வொரு நாளும் இதைச் செய்து வரலாம். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


படம் 3 – உங்கள் உடல் உறுப்புகள் சீராக இயங்க, சீராக இயக்க என்ன செய்ய வேண்டும்?


கண் பார்வை மங்கினால், உட்கார்ந்து காலை நீட்டிக் குனிந்து (படம் – 3) காலில் பெரு விரலைத் தொடவும். மூன்று முறையாவது செய்யவும்.


1.குனிந்து இருக்கும் பொழுது, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

2.அந்த நினைவு முழுவதையும் கண்ணிலே நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.

4.அந்த துருவ நட்சத்திரத்தை எண்ணி சிறிது நேரம் மூச்சை அடக்கி, பின் மூச்சை விடவும்.


இதனால் சிறு மூளை பாகங்களுக்குள் உள்ள நுண்ணிய நரம்புகளுக்குள்ளும் இரத்த நாளங்களுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பாயும்.


இப்படிச் செய்து வரும் பொழுது உங்கள் உடல் உறுப்புகள் சீராக இயங்க, சீராக இயக்க உதவும்.


குறிப்பு: இது மூச்சுப் பயிற்சி அல்ல. 


துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்திகளை எண்ணத்தின் மூலம் உயிரான ஈசனிடம் வேண்டி நம் உள் உறுப்புகளுக்குள் இணைக்கச் செய்கின்றோம்.


அதில் உள்ள விஷத் தன்மைகளை வேக வைத்து உறுப்பை உருவாக்கிய அணுக்களை உற்சாகப்படுத்தி அதை வீரியம் அடையச் செய்து உறுப்பின் இயக்கத்தைச் சீராக்குகின்றோம்.


இது உங்களால் முடியும். உங்கள் எண்ணத்திற்கு எவ்வளவு வலு இருக்கின்றது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


காலை மடக்கிக் குனிந்து செய்யும் பயிற்சியைக் கர்ப்பிணிப் பெண்கள் செய்யக்கூடாது.


Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...