Tuesday, March 9, 2021

Shiva Guru SPARK VASI YOGA

 Shiva Guru SPARK VASI YOGA 

", எந்த நேரமும்

மெய்ப்பொருளை 

விட்டு நீங்காமல் 

வாசியைக் கொண்டு

கும்பித்து பூவை

அசையவிடாமல்

தியானம் செய்து

பாருங்கள்.

அங்கே ஞான ஒளி

அழகிய வட்டமாய்

தெரியும்.

அப்போது 

ஒரே நிலையாய் வாசியை செய்து வர

சூரிய சந்திர கலைகளில்

வெளியேரும்

மூச்சுக் காற்று

பாய்ந்து ஓடாது.

அதிலேயே வாசியானது

பம்பரம் போல்

சுழன்று கொண்டே

உடம்பின் உள்ளேயே

நிற்கும்.

அந்த ஏக பம்பரத்தையே

உள்ளிருந்து 

தவம் புரிய அதிலேயே

சக்தியும் சிவனும்

ஏகபோகமாக இருப்பதையும்,

அதுவேதான் 

சிவம் என்பதையும்

அறிந்து கொள்ளலாம்.

சத்தியமாய் சொல்கிறேன்.

அங்கு தான் 

பானம் எனும்

அமிர்தம் உள்ளது.

அந்த பானத்தை

அங்குள்ள 

சக்தியும் சிவனும்

சேர்ந்து தான்

கொடுப்பார்கள்.

ஆகையால் அவர்களை

பற்றி நின்று,

அவர்கள் கொடுக்கும்

அமுதபானத்தை

இறக்கி உண்ணு.

மேலும் பூரணமாகிய

மெய்ப்பொருளில் தான்

சக்தியும் சிவனும்

உயிராய் நின்று

ஆட்டுவிக்கும்

உண்மையை உணர்ந்து

இறவா நிலை பெற்று

இறைவனை சேரதியானம்

செய்து நிற்க வேண்டும்.",!!!!!

   ",  ஓம் நமசிவய ",


நூல்

:: :::::;;;

ஸ்ரீ சுப்பிரமணியர்

ஞானம் 500



No comments:

Post a Comment

Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...