Thursday, February 1, 2024

Satya Yuga Rule (sithargal Rule)

 🙏🔱💥முருகப்பெருமானின் வழிகாட்டலில் சித்தர்கள் ஆட்சி



🔱💥பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது. கிபி 2027 முதல் கிபி 2037க்குள் நமது பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது.


🔱💥முருகப்பெருமானின் வழிகாட்டலில் சித்தர்கள் பாரதத்தை மையமாகக் கொண்டு இந்த பூமியை ஆட்சி செய்யப் போகிறார்கள். பழனி மலையில் இருக்கும் நவபாசாண முருகனின் சிலை சிதைந்து விட்டது நம் அனைவருக்கும் தெரியும். இந்த சிலையை போகர் நிறுவினார்.


🔱💥அவர் இதேபோல் 

9 நவபாசாண சிலைகளை உருவாக்கி பழனி மலையும் அதைச் சுற்றியுள்ள சில இடங்களிலும் மறைத்து வைத்திருக்கிறார். அதேபோன்று ஒரு முருகன் சிலை பழனி மலையில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது.


🔱💥கிபி 2027 முதல் 

கிபி 2037 க்குள் போகர் விரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வேறு ஒரு சித்தரால் புதிய நவபாசாண சிலை நிறுவப்படும். குணக்கேடுகளால்தான் நமக்கு மீண்டும் மீண்டும் பிறவி வருகிறது. பொறாமை, பேராசை, அளவு கடந்த சினம், பிறர் மனம் புண்படும்படி பேசுதல் போன்ற குணக்கேடுகளே பிறவிக்கு காரணமாகும். பத்தி தான் குணக்கேடுகளை பற்றி புரிந்தும் அதை வெல்லுகின்ற உபாயத்தையும் உணர்த்தும்*


🔱💥மனிதர்களின் பாவ மிகுதியால் இயற்கை சீற்றமடையும்.  கடற்கரையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் 100 கிலோ மீட்டர் உயரம் அலைகள் எழும்பி நகரங்களை நாசமாக்கிவிடும்.

புயல்கள் வீசும்.


🔱💥இந்த மாற்றங்கள் கிபி 2027 முதல் கிபி 2037க்குள் நடந்து முடிந்து விடும். அணைக்கட்டுகள் உடைந்து மின்சாரம் அறவே இருக்காது. இயற்கையின் சீற்றத்தால் மக்கள் தொகை பெருமளவு குறைந்துவிடும். நிலத்தில் அழிவு ஏற்படும்போது *கொங்கணவர்* தோன்றுவார். 120 வருடம் வரை கொங்கணவர் ஆட்சி ஏற்படும்.


🔱💥நேர்மையும் சத்தியமும் இருக்கும். தெய்வீகம் சேரும். காகித நோட்டுக்களே இருக்காது. தங்க நாணயங்கள் புழக்கத்துக்கு வந்து விடும். பல மேலை நாடுகள் அனைத்தும் பொசுங்கி போய் விடும். அசுர சத்திகளை காளி அப்படியே அடக்கி ஒடுக்கி விடுவாள். பிறகு இந்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய ஆதிபராசத்தி தேவியினுடைய சத்தியானது ஞான சித்தர் உடைய ஆத்ம சத்தியின் ஒளிப்பிழம்பாக தெரியும். இதனை கமலமுனி நாடி சூட்சுமமாக வெளிப்படுத்தியுள்ளது.


🔱💥2037ல் தான்

ஞான சித்தரை உலக நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொள்ளும். இந்தியாதான் உலகத்திற்கே வல்லரசு ஆக போகிறது. உலகமே அதனுடைய ஆட்சியின் கீழ் வரப்போகிறது. இதனை ஞானத்தினால் மட்டுமே உணரமுடியும். வெளி ஆற்றலால் ஒருபோதும் உணர முடியாது.


🔱💥உலகிற்கே வழிகாட்ட போகிற ஒரு சோதி தென்னாட்டில் இருந்துதான் தோன்றப் போகிறது என்று தீர்க்கதரிசனமாக  சித்தர்கள் சொல்லிவிட்டார்கள். ஆம் அந்த ஞான சித்தர் சென்னையிலிருந்து உலகிற்கே வழிகாட்ட போகிறார்.


🔱💥18 மாபெரும் சித்தர்கள் அனைவரும் இந்த ஞானசித்தர் இடம் வந்து பேசுவார்கள். அத்தனை சத்திகளும் 2027 க்கு பிறகு அந்த ஞான சித்தரிடம் ஒன்றிவிடும். உலகம் இதை எதிர்காலத்தில் வரக்கூடிய காலகட்டங்களில் உணரும். வரக்கூடிய தத்துவங்களில் எல்லாம் அவர் பெயர் காலத்தால் அழியாமல் இருக்கப்போகிறது.


🔱💥2037 க்குப்பிறகு அவரால்தான் தமிழ்நாடு உலகிற்கே வழிகாட்ட போகிறது. அவர் யார் என்பதை பரஞ்சோதி சுவாமிகளுக்கு அகத்திய முனிவர் காட்டியுள்ளார். இதை சித்தர்கள் நாடி மூலமாக புரிந்து கொள்ளலாம்.


🔱💥இது எல்லாம் சித்தர்கள் மூலமாக நடக்கும் என்று சொல்லிவிட்டார்கள். இதெல்லாம் நீங்கள் நடக்க காண்பீர்கள். . அதனால் நீங்கள் தேட வேண்டியது உலகியல் பொருள்களையல்ல. ஆன்மா சம்பந்தப்பட்டது. 

தன்னைஅறிகின்றவன் தலைவனை அறிவான். உடம்பைப்பற்றியும், உயிரைப்பற்றியும் அறிவதே தன்னை அறிவதாகும். அதுவே ஞானமாகும். உடம்பையும், உயிரையும் பற்றி அறிந்து கொண்டவர்கள் இயற்கை அன்னையைப் பற்றியும் அறிந்து கொள்வார்கள்.


🔱💥தன்னை அறியக்கூடிய அறிவு பெற்றாலும் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளாது, தன்னடக்கத்தோடு இருந்து குரு அருள் பெற்றுக்கொள்ள வேண்டும்.


🔱💥குரு அருள் இன்றி ஒருவன் தன்னை அறியமுடியாது. குணக்கேடுகளால்தான் நமக்கு மீண்டும் மீண்டும் பிறவி வருகிறது. பொறாமை, பேராசை, அளவு கடந்த சினம், பிறர் மனம் புண்படும்படி பேசுதல் போன்ற குணக்கேடுகளே பிறவிக்கு காரணமாகும். குருபத்திதான் குணக்கேடுகளை பற்றி புரிந்தும் அதை வெல்லுகின்ற உபாயத்தையும் உணர்த்தும். ஆகவே குருபத்திதான் தன்னை அறியக்கூடிய தகைமையைத் தரும்.


"தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே."


"என்னை யறிகிலேன் இத்தனை காலமும்

என்னை யறிந்தபின் ஏதும் அறிந்திலேன்

என்னை யறிந்திட் டிருத்தலும் கைவிடா(து)

என்னையிட் டென்னை உசாவுகின் றேனே."


தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்

பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்

சென்னியில் வைத்த சிவனருளாலே



No comments:

Post a Comment

Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...