நாடி முறையில் பரிகார சூட்சமம்
__________________________
வகுப்பில் சித்தயோகியாரிடம் ஒருவர் சிறந்த ஜோதிடருக்கும் சாதாரண ஜோதிடருக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டார், அதற்கு சித்தயோகியார் அவர்கள்
"எவர் ஒருவருக்கு அதிக கிரக காரகங்கள் தெரியுமோ , எவரால் கிரகங்களுக்கு புதிதாய் காரகங்கள் யோசிக்க முடியுமோ அவருக்கு நவக்கிரக சித்தி ஏற்பட்டு சிறந்த ஜோதிடராக விளங்குவார்" என்றார்.
கிரகங்களும் திசையும்
புதன் - வடக்கு
குரு & கேது - வடகிழக்கு
சூரியன் - கிழக்கு
சுக்கிரன் - தென்கிழக்கு
செவ்வாய் - தெற்கு
ராகு - தென்மேற்கு
சனி - மேற்கு
சந்திரன் - வடமேற்கு
சில கேரளத்து ஜோதிடர்கள் இந்த திசையை வைத்தும் அந்த கிரகத்தின் வேறு காரங்களை வைத்தும் தாந்த்ரீக பரிகாரங்கள் கூறுவர்.
உரைத்த பரிகாரங்களை சிந்தித்து பார்த்தால் நாடி ஜோதிட விதிகளை தான் பயன் படுத்தி உள்ளனர் என்று தோன்றுகிறது
கோயில் யானைகளை தேர்ந்து எடுக்க செல்லும் பொழுது எந்த யானை வடகிழக்கு (குரு+கேது) நோக்கி தூங்குகிறது என்று பார்த்து தேர்ந்து எடுத்தார்கள்.
திருமணம் ஆகாத ஆண்கள் மாதம் ஒருமுறை வீட்டில் தென்கிழக்கில்(சுக்கிரன்) வெல்லம் /கரும்பு சாப்பிட்டு வந்தால் திருமணம் நடக்கும்.
இது போல் திசையையும் கிரக காரங்களை வைத்தும் பரிகாரம் செய்யலாம்
நன்றி

No comments:
Post a Comment