சிவனின் நெற்றிக்கண்ணும்...
அறிவியல் கூறும் உண்மையும்...
***********************************************
மரணம் என்பது இயற்கை
இதை வெற்றிகாண்பதே கர்பசாதனை மனிதனின் சிரசு(தலை)உள்ளே அண்டவித்தை நடக்கிறது இதை
சித்தர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள்..
நமது தலைக்குள் இரண்டு புனித ஸ்தலங்கள் உண்டு..ஒன்று
ஆக்ஞா சக்கரம்(Pituitery gland)
இருக்கும் இடம்
மற்றொன்று சகரஸ்ராதளம்
(penial gland)இருக்கும் இடம்
(Penial gland)பீடம் நெற்றிக்கு நடுவில்
இருக்கும் ஸ்தலம்..பலர் நெற்றிக்கண்ணையும்(third eye)
புருவநடுவையும்(pituitery)ஒன்று என்று
தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது
நெற்றிக்கண் என்பது பீனீயல்சுப்பி
இருக்குமிடம்..இது ஆகாசவடிவில்
பீனீயல்சுரப்பியோடு இணைக்கப்பட்டு
உள்ளது...
இன்றைய அறிவியல் கூறும் உண்மை
என்னவென்றால்...இந்த பீனியல் சுரப்பியை இயக்கசெய்வதன் மூலம் அவன் பலகாலம் வாழ முடியும்..
பீனியல்சுப்பியை இயக்கி சுரக்க வைக்கும் வித்தையே யோகமார்க்கம் எனப்படும்
பீனீயல்சுரப்பி14வயதுவரை வளர்ச்சி அடைந்து அதன்பிறகு குன்றிவிடும்.
பீனீயல்சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன் "மெலடோலின்"என்ற திரவம் ஆகும்.இந்த திரவம் ஆயுளை அதிகரிக்கவும்..உடல் இளமையாக இருக்கவும் உதவுகிறது..
இதை தவிர்த்து
செரோடொனின்(serotonine)
டொபொமின்(Dopomine)
ஆக்ஸிடாசின்(oxtocine)
மற்றும்
ஓபியத்ஸ்(BRIN opiates)
மூளையில் இருக்கும் நுண்மின்னியக்கி சமிக்ஞை
(neuro Transmirrer).
இந்த ரசாயனங்களை சரியான விகிதத்தில் சுரக்க வைப்பதன் மூலம்
நாம்.உடல் சார்ந்த...மனம் சார்ந்த
எல்லா பிரச்சனைகளையும்
எதிர்கொள்ள முடியும்..
இந்த பீனீயல்சுரப்பியின் சுரப்பை
அதிகரிக்க முறையான மூச்சுபயிற்சியும்..ராஜயோக தியானமுறைகளும் பயன்படுகின்றது
மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்..
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உயித்துவிடும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்..
இந்த குறள்களில் வரும் மலர்முசை.
மானடி..அடக்கம்..வையம்..என்பது பரிபாசை..
பாரப்பா பரப்பிரம்ம ஓளியினாலே
பத்தியே நரம்புவழி பாயும்போது
ஆரப்பா இருகண்ணில் ஓளிவதாகி
அண்டமெல்லாம் ஏகமாய் தெரியலாச்சு..
காரப்பா நரம்பெல்லாம் விழுதுவட்டம்
கபாலத்தில் முக்கூறாய் சுழுமுனையாச்சு
வீரப்பா காதுக்கும் நாக்குக் குந்தான்
வெற்றிபெற இன்னுமுந்தான்
உரைப்பேன் கேளு
பாரடா புருவமத்தி யெதென் றாக்கால்
பரப்பிரம்ம மானதோர் அண்ட உச்சி
நேரடா முன்சொன்ன நரம்புமத்தி
நிலைத்தடா சுழுமுனையென்று
நினைவாய் பாரு..
வீரடா அண்ணாக்கின் மேலே மைந்தா
மேலடா மனதையுஞ் செழுத்தும்போது
காரடா சுழுமுனையில்
மனம்தான் பாய்ந்து கலந்தைந்து பூதமும் ஒன்றாய் போமே..
ஆத்மவித்தை என்பதும்...
பரப்பிரம்மவித்தை என்பதும்...
இதுவேயாம்....
இதைபுரிந்து பயிற்சிசெய்து சித்திசெய்து கொள்வதே ஆன்மீகம்..
No comments:
Post a Comment