Shiva Guru Spark Yoga 🧘♀️
இறைத்தேடலில் உள்ளவருக்கு அவசியம் தேவைப்படும் புரிதல்கள்.*
*1. இவ்வுலகிலுள்ள, எதுவுமே உன்னுடையதல்ல.*
*2. இவ்வுலகிலுள்ள எவற்றாலும் உனக்கு மனநிறைவைத் தரமுடியாது.*
*3. இவ்வுலகிலுள்ள அத்தனையும் (உடலுட்பட) ஐம்பூதங்களால், தோன்றி அழியக் கூடியவையே.*
*4. இவ்வுலகிலுள்ள அனைத்தும் தற்காலிக இன்ப துன்பங்களைத் தரும் மாயை ஆகும்.*
*5. இவ்வுலகிலுள்ள இவ்விதமான இன்ப துன்பங்களைத் தரும் அத்தனையும், மனிதனுக்கு விறுப்பு-வெறுப்பைத் தரவேப் படைக்கப் பட்டுள்ளன. விருப்பு-வெறுப்பு தருபவையாகும் மனிதனுக்கு இன்ப துன்பங்களை தரவே படைக்கப்பட்டுள்ளன. இதுவே இந்த பிரபஞ்சத்தின் மாயை ஆகும் !!!
*6. இவ்வுலகில் வெறுப்பைத் தரும் எவற்றாலும் பாதிக்கப் படாத நிலைதான் ஆன்மீகத்தின் அடித்தளம். ஏனெனில் நம் மனம் ஆன்மாவில் நிலைப்பது ஆன்மீகத்தின் எல்லை !!!
*7. பிரச்சனைகளுக்கு காரணம் உன்மனமே என்றநிலைதான் ஆன்மீகத்தின் வளர்ச்சி.*
*8. பக்குவம் அடைந்த உன் மனமும் பிரச்சனைகளுக்கு காரணம் இல்லை என்று உணரும்போதுதான், உன் ஆன்மீகம் முதிர்ச்சி அடைகிறது. கவலை, பயம், வெறுப்பு, கோபம் போன்ற சுய தண்டனைகள் தரும் உணர்வுகளிலிருந்து விடுபடுவது ஆத்ம ஞானத்தில் நிலை பெற்றதற்கான அடையாளம் !!!*
*9. ஆம், எதைப்பற்றியும், கவலை இல்லாத நிலையும் எதைப் பற்றியும் பயப்படாத நிலையும், எதன் மீதும் வெறுப்பற்ற நிலையும், எவர் மீதும் கோபமற்ற நிலையும், உண்மையில் இவை தான் நிரந்தர சந்தோஷம் எனப்படுகிறது !!!
*10. எந்த ஒன்றை நீ அடைந்தால் உன் மனமானது, நிறைவு / நிம்மதி பெருமோ, அந்த தன்னையறியும் அறிவே, ஆத்ம ஞானமாகும்.*
*11. எந்த-ஒன்றை நீ அடைந்தால், மரணத்தின்போது கூட, உன்னால் சந்தோஷமாக இருக்க முடியுமோ, ... அது ஆத்மஞானமாகும் !!!*
12. மனிதன் *ஆத்மஞானத்தை* அடைவதும், தன்னுள் என்றும ஆனந்தமாக *இருப்பதும்,* ஜீவன் முக்தனாக *வாழ்வதும்,* சித்த புருஷனாய் *இருப்பதும்,* தன்னை தானே *உணர்வதும்,* தன்னுள் இருக்கும் இறையுணர்வில் *கலப்பதும்,* அந்த இறைவனே தானென *ஆவதும்,* இறுதியாக, மரணத்தின் போதுகூட *சந்தோஷத்தோடு,* பிரம்மத்தில் *ஐக்கியமாவதும்,* என ... இவையே, மனிதப்பிறவியின் *பிறவிப்பயன்* எனப்படுகிறது.
இதற்காகவே, *நாம் மனிதனாக* இந்த பூமிக்கு வந்துள்ளோம். அதில் *மிகப் பெரும் பகுதி* வீனாகிவிட்டது. எஞ்சியதோ, எவ்வளவு *சிறியதென அறியாத* சொற்ப வாழ்க்கையே !!! அதற்குள், *மனித லட்சியத்தை அடைந்துவிடு* என்று வேதங்கள் கூறுகின்றன !!!
மனிதனும், "எது உண்மையான சந்தோஷம்" என்பதைப் புரிந்து கொள்வதில் அவன் *மிகப்பெரிய* தவறு செய்து விடுகின்றான் !!!
தோன்றி *மறையக்* கூடிய நிலையற்ற இன்பங்களை தரக்கூடிய (பணமே) *நிரந்தர* சந்தோஷம் என்று *நம்பி* விடுகின்றான் !!!
700 கோடி உலக மக்களையும், அவர்களிடமுள்ள செல்வங்களின் அடிப்படையில், தரவரிசைப்படி பட்டியலிடுவோம். அதில் நாம் ஒவ்வொருவரும், ஏதோ ஒரு இடத்தில், கீழேயோ, நடுத்தர மாகவோ, அல்லது மேலேயோ, இருக்கப் போகிறோம். இவ்வுலகில், சந்தோஷமாக இருக்க *மனம்தான்* தேவையே தவிர, *பணம் தேவையில்லை !!!* மனதில் *நல்லறிவு* தேவை. ஏனெனில், ஞானமே கவலையை நீக்கும் *கோட்டைச்சுவராக* இருந்து, நமக்கு *சந்தோஷத்தை* தருகிறது.
சந்தோஷத்தைப் பெறுவதற்கு, ஒருவேளை, பணம்தான் தேவை என்றால், பணக்காரர்கள் *அத்தனை பேரும், கவலை இல்லாமல் தானே இருக்கவேண்டும்?* ஆனால், உண்மை நிலைமை *அவ்வாறும் இல்லையே !!!* மாறாக, சந்தோஷமாக இருப்பதற்கு ஏழ்மை தடை என்றால், *ஏழைகள் அத்தனைபேரும் கவலையோடு தானே இருக்க வேண்டும்?* ஆனால் உண்மை நிலைமை *இவ்வாறும் இல்லையே !!!*
தேவைகள் என்பது மனிதனுக்கு *என்றுமே தொடர் கதைதான் !!!* ஒரு தேவையை அடைகிறோமோ இல்லையோ, அதற்குள்,மற்றொன்று முளைத்துக் கொள்கிறது !!! *அமிர்தமே* கிடைத்தாலும் கூட, அது மனிதனுக்கு *மனநிறைவைத் தந்து விடுவதில்லை.*
இதுவே பொருட்களைப் பற்றிய *நம்மனதின்* உண்மை புரிதல் !!!அதைப் புரிந்து கொள்ளாத காரணத்தால் தான் பணத்தை தேடுவதையும் அவனால் *நிறுத்த முடிவதில்லை.* உண்மையைச் சொல்ல வேண்டுமானால், தேவைகள் *"என்றுமே தீராது"* என்பது கூட நமது மனதின் இயலாமையின் வெளிப்பாடே !*
*எந்த ஒரு பொருளாலும் உனக்கு *மன நிறைவைத் தரவே முடியாது.* இதை புரிந்துகொள்ள முடியாததே உன் மனத்தின் *பலவீனம் ஆகும் !!!*
*எந்த ஒரு பொருளை அடைந்தால் அதற்கும் மேல் ஒரு சிறப்பான பொருளை நீ அடைய வேண்டியதில்லை என்கிற நிலையை (மனநிறைவை) தருகிறதோ, அதுவே *ஆத்ம ஞானம் !!!*
மீண்டும் கூறுகின்றேன். எந்த ஒரு பொருளை *அடைந்தால்* அதற்கும் மேல் ஒரு சிறப்பான பொருளை நீ அடைய *வேண்டியதில்லை* என்கிற நிலையைத் தருகிறதோ, அது ஆத்ம ஞானம் *மட்டுமே !!!*
அதாவது பணத்தின் பின்னே *ஓடுக்கொண்டிருப்பதையே* நாம் நிறுத்த வேண்டுமானால், அது மனநிறைவால் *மட்டுமே சாத்தியமாகும் !!!* மனநிறைவு மட்டுமே ஆசைகளை அகற்றும் *சக்தி கொண்டது !!!* அதற்கெல்லாம் மிகப்பெரிய *ஞானம் வேண்டும் !!!*
ஆம், ஆன்மீக சகோதரர்களே !!! மனநிறைவு கொண்டவனுக்கே *ஞானம் பிறக்கும் !!!* அந்த ஞானமே அறியாமை விலக்கும் !!! அதன்பின்புதான் *கவலைகள் மறையும் !!!* கவலைகள் மறைந்தால் தானே சந்தோஷம் பிறக்கும்? சந்தோஷமாக வாழ்வது தானே வேதங்கள் கூறும் மனித லட்சியம் ?
எவரேனும், ஒருவன் உன்னை *ஒரு சொல்* சொல்லி விட்டால், *மன-வலியாலும் அவமானத்தாலும்* எவ்வளவு வேதனைப் படுகிறாய் !!! ஆனால், மானிடா *உனக்கு நீயே* கொடுத்துக் கொள்ளும் *சுய-தண்டனை தான்* கவலையாம் !!!
முட்டாள்கள் தான் கவலைப்பட்டுக் *கொண்டு இருக்கிறார்கள்* என்றால், *புத்திசாலியான நீயுமா* கவலைப் படுவது? ஆட !!! *எடுத்துச் சொன்னாலாவது,* கவலைப்படுவதை *நிறுத்தலாமே !!!*
*இயற்கையாகவே *கவலைப்படும் மனிதனை, கோபத்தோடு நீங்கள் முட்டாள் என்று சொல்லலாமா* என்று கேட்கிறீர்களா?*
*என் கோபத்தின் காரணத்தை* புரிந்து கொள்ளுங்கள். கவலையானது *மோசமான மனநோய் !!!இந்த மனநோய் மனிதனை இருவகைகளில் கொன்றுவிடும் !!!*
*(a)பைத்தியக் காரனாக்கிவிடும் !!! பரவாயில்லையா? சொல்லுங்கள் !!!(b)தற்கொலைக்கு தூண்டிவிடும் !!!பரவாயில்லையா? சொல்லுங்கள் !!!*
*எனவே, இதற்கு தீர்வுதான் என்ன? கவலையற்ற வாழ்க்கையே மனித லட்சியம் !!!*
*Shiva Guru Spark Trust* "Dharma surely clear all your Karma,Do consistently Dharma and evolve into higher self "

No comments:
Post a Comment