உலகிற்கு அறிமுகப்
படுத்திய தாய்,தந்தை
முதல் தெய்வங்கள்.
தந்ததால் அவன் தந்தை. 'தா',எனக் கேட்டுப் பெற்றதால்
அவள் தாய்.
கல்வி பயில அவர்கள் காட்டியது குருநாதனை.
அந்தக் குருநாதன் காட்டியவதே இறைவன்.
மாதா,பிதா,குரு, தெய்வம்
என்று வரிசைப் படுத்தியது
அறநூல்.
பெயரும்,வடிவமும்
இல்லாத பரம்பொருளைச்
சுட்ட, தமிழ் மொழி
இட்ட பொதுப் பெயர்கள் வருமாறு:-
இறைவன்,
கடவுள்,
ஆண்டவன்,
அரன் எனும் பொதுச் சொற்களே அனைத்து மொழிகளிலும் நிலவுகின்றன.
பெயர்,வடிவம் இல்லா
கடவுள் ஒருவனே!
சமய மதங்கள் இட்டப்
பெயர்கள் கணக்கில!
ஒருவன் சிவன் என்கிறான்;
ஒருவன் நாராயணன் என்கிறான்.
இவ்வாறே சக்தி, கணபதி,
சூரியன் எனும் பெயர்கள்
வழங்குகின்றன.
இவை அனைத்தும் கற்பனைப் பெயர்கள்.
ஒரே கடவுளுக்கு வழங்குகின்ற பல பெயர்கள்.
No comments:
Post a Comment