மனமாசுகளை நீக்கிய பிறகு,மீண்டும் அவை திரும்பப்பற்றாதவாறு
கவனமாக இருத்தல் வேண்டும்.
பரம்பொருள் ஒன்றே! அந்த
ஒன்றே உலகமாகவும், எண்ணிலடங்காத உயிர்களாகவும் வடிவெடுத்திருக்கிறது, எனும்
ஞானத்தில் உறுதிபெற்றிருக்க வேண்டும். அதனை நிறைஞானம் என்பர்.
மனத்தூய்மையை கெடுக்கின்ற குணங்கள் ஆறாகும். அவை காமம்,குரோதம்,உலோபம்,
மோகம், மதம்,மார்ச்சர்யம்
ஆகும்.அவற்றை தமிழில்,
ஆசை,சினம்,ஈயாமை,மயக்கம், செருக்கு, பொறாமை
என்று கூறுவர்.
அவை அனைத்தும் நீங்கப்
பெற்றவனே துறவி எனப்படுவான்.கருவி, கரணங்கள் நீங்கிய தொண்டனாகிறான். ஆத்ம
உணர்வு அவனுடைய உள்ளத்தில் ஒளிர்வது உறுதி ஆகிறது.
மனிதனைத்தவிர அனைத்து உயிர்களும் ஓரறிவு முதலாக ஐந்தறிவினை உடையவை. மானிடர்க்கு மட்டுமே ஆறறிவு.
அதற்கான காரணத்தை அறியாமல் வாழ்நாளை வீணாளாக்குகிறான் மனிதன்.
உலகினை ஆய்ந்து, சாத்திரங்கள் கூறுவதைப் போன்று உலகமும்,அதனால் அமைகின்ற புறப்பற்றுக்களும் பொய்
என்பதை உணரவேண்டும்;
தான் அற்பஞ்சீவனல்ல!
பரமாத்மாவின் அம்சம் என
உணரவேண்டும். மாயா மனதைத் தூயமனதாக்கி
தன்னுள் ஒடுங்கும்படிச் செய்ய வேண்டும்; பரமாத்மாவோடு இணைய
வேண்டும். அதற்காக இறைவன் அளித்த நன்கொடையே அறிவு.
அறிவு, இரண்டு வகைப்படும். ஒன்று சிற்றறிவு; அது புறவுலக
வாழ்க்கைக்குமட்டுமே பயன்படும்.
மற்றொரு அறிவு, இறைவனை உணர்தல்;
அதற்கே ஞானம் என்று பெயர்.பேரறிவு எனப்படுவதும் அதுவே!
பொறி புலன்களால் மனம்
அறிந்துசெயல்படுவது புறவுலக அறிவு. பொறி புலன்களைக் கடந்து, மனமானது வெளியேறி,
அகவாழ்வின் மூலம் தன்னை ஆத்மாவில் ஒடுக்கிக்கொள்ளும். சீவனாக இருந்த ஆத்மா, சுதந்திர ஆத்மாவாக மாறி, பரமாத்தாவில் ஐக்கியமாதலே ஞானம்.
அதனைத்தான் மானுடம் பெறவேண்டும் என்பதே
படைத்தத் தலைவனின் நோக்கமுமாகும்.
கிடைத்தற்கரிய மானிடப்பிறப்பை, வீணாக்காமல் தன்னை உணர்க! தலைவனோடு இணைக! வாழ்த்துக்கள்!💐
களிமண்ணால் பானை
வனையமுடியாது.
களிமண்ணை நீரில் பிசைய
வேண்டும். அந்த நீருக்கு இணையானது
கருணை எனும் சக்தி.அதற்கே
கருணாம்பிகை எனக் கற்பனையாக பெயரிட்டுள்ளனர்.
சிவமும் அவரது ஆற்றலாகிய
அருட்சக்தியும் ஒன்றே.நாத சிவம் இடைவிடாது ஒலித்துக்
கொண்டே உள்ளது.அந்த ஒலியே அநாகதம் எனப்படுகிறது. அந்த ஓசையின்
சிதரல்களே உலகமெங்கும்
ஒலிக்கின்ற ஓசைகளாகின்றன.
No comments:
Post a Comment