Monday, October 30, 2023

secret of Lord Muruga Tamil

 முருகன் - இறைவன்

சூரன் - ஆணவம்

சம்ஹாரம் - அழிவு 


“நான்” என்ற ஆணவம் தான் சூரன்

"நான் பிரம்மம்" என்ற ஞானமே முருகன் 


ஆத்மா தன் இருப்பை உணரும் உணர்வு நான் என்று வெளிப்படும். (அது பெரிய நான்) அந்த நான் பிரம்மத்திலிருந்து விடுபட்டு தன்னை ஒரு ஜீவனாக நினைத்துக் கொள்வதே ஆணவம் (சிறிய நான்). அந்த ஜீவ அகந்தையின், அறியாமையின், விருப்பு வெறுப்புகளில் இருந்து பாவ-புண்ணிய பதிவுகள் சேர்கின்றன. 


மனித உடலில் இருந்தாலும், " உலகனைத்தின் பிரம்மம் நான் " என்று உணர்தலே சூர சம்ஹாரம். (ஆணவத்தின் அழிவு)


சூரனை முருகன் கொன்றான் என்பது வரலாறு. ஆனால் உண்மையில் அது கொலை அல்ல. சூரன், ஒவ்வொரு தலையோடும் முருகனோடு மோதி மோதி, திரண்டு நிற்கும் முருகனின் அதிர்வுகளை மறைமுகமாக பெற்று, தீட்சையை உள்வாங்கி, இறுதியில் பிளவுபட்டு சேவலும் மயிலுமாக முருகத்துவம் பெறுகிறான்.


முருகன் சூரனை கொல்லவில்லை. சேவலும் மயிலுமாக, முருக வாகனமாக, கொடியாக ஆக்கினார். 

சூரனின் நான் என்ற ஜீவ-அகந்தையை அழித்து, தன்னுடைய அம்சத்தை கொடுத்தார். அதனால் அவன் தனி இருப்பு மறைந்து, பிரபஞ்ச இயக்கத்தின் ஒரு பாகமாக ஆனான். பிரம்மத்தின் வடிவம் ஆனான். 


ஞானிகள் எல்லோரும், அவர்களுக்குள் சூரசம்ஹாரம் நிகழ்ந்து, சேவலும் மயிலுமாக வாழ்பவர்கள்தான். அவர்கள் தனிப்பட்ட மனிதனாக இல்லாமல், இறைவனை சுமக்கும் வாகனமாக, இறைவனை பாடும் கொடியாக இருப்பவர்கள்தான். 


ஒவ்வொரு மனிதனும், உயிர்-உடல் என்ற இரண்டின் கூட்டணி.  

அல்லது தந்தையின் வித்து - தாயின் நாதம்  என்ற இரண்டின் கலப்பு.


நாதம் - சேவல்

வித்து - மயில் 


வித்து நாத கலவையாக,

 தன்னை ஒரு ஜீவனாக பாவித்து, மாயையில் மயங்கி இருந்த சூரபத்மனை, ஞானம் என்ற வேல் இரண்டாக பிளந்தது. 

நாதம் சேவலாக முருகன் புகழ் பாடியது. வித்து மயிலாக இறைவனை சுமந்தது. மனிதன் தெய்வத்தின் குரலாகவும், தெய்வீகத்தை சுமப்பவனாகவும் வாழ செய்வதே சூரசம்ஹாரம். 


வெளிப்படையாக பார்க்கும்போது, வேல் என்பது கொலைக்கருவியாக இருக்கிறது. ஆனால் அது ஞானத்தின் சின்னம். ஞானத்தின் ஸ்தூல அடையாள பொருள் தான் வேல். 


அறிவு - கூர்மையானது, பரந்தது(அகன்றது), ஆழமானது. இது அறிவின் தன்மை. வேலுடைய அமைப்பும் இப்படி தான் இருக்கிறது. அதன் நுனி பகுதி கூர்மை, மையப்பகுதி அகலம், கைப்பிடி பாதம் வரை வரும் நீளம்(ஆழம்) .


இறைவனை, "ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்று சிவபுராணம் கூறுகிறது. ஆக இறைவன், அறிவு, வேல் மூன்றின் இலக்கணமும் ஒன்றே.

Saturday, July 8, 2023

Vedic secrets

 பரிபாஷை



நமது முன்னோர்கள் பெரும் யோக ரகசியங்களை வெளிப்படையாக சொல்லி விட்டு தான் சென்றுள்ளார்கள்.


ஆனாலும் அந்நியர் படையெடுப்பு மற்றும் அவர்கள் நமது சாஸ்திரங்களை களவாடிக்கொண்டு போய்விட்டனர் என்பதும் மறுக்க முடியாது.


இங்கே இப்படத்தில் காண்பிக்கப்பட்டது எது பற்றிய ரகசியம்?


இப்படத்தில் பெரும் ரகசியம் வெளிப்படையாக உள்ளது. வாசியின் எண் ரகசியம் அறிந்தார் வெளிப்படையாக சொல்லலாம்.


ஆனாலும் இங்கே பலர் பணத்திற்கு விற்க முற்பட்டு விட்டனர். அந்நியர்களோ அதற்கும் முன்னரே திருடிச்சென்று விட்டனர்.


புஜண்ட மாமுனிவர் தனது பாடலில் 4ம் 8ம் சேர கபடமற்ற தேகமாமே என்று உரைத்து உள்ளார்.

அகத்தியர் பெருமான் இரு நான்கும், நான்கும், 16ம் சேர பூரணம் என்றுரைத்து சென்றுள்ளார்.

இப்படத்தில் 4 -- என்பது "பார்வையை" குறிக்கிறது.

8  -- என்பது "மன எண்ணம்"  என்பதை குறிக்கிறது.

16  --- என்பது "கேட்டல்" என்பதை குறிக்கிறது.

மேலும் 32, 64 முறையே சுவை மற்றும் உணர்வு இவற்றை குறிக்கிறது.

பலர் இந்த 16, 32, 64 இவை பிராணாயாம நேர கணக்கீடு என்றே புரிந்துள்ளனர். உண்மையில் அவ்வாறு அதிக நேரம் மூச்சை நிறுத்தினால் நோய் தான் வரும்.


அவற்றின் உண்மை வெளிநாட்டில் சிக்கி உள்ளது.

இது என்ன வெனில் "manifestation technique", அதாவது எண்ணங்களை, இப்புற உலகில் பொருளாக பரிணமிக்கசெய்வது பற்றிய ரகசியம்.

இவற்றை நம் யோகிகள் அறிந்து மறைபொருளாக வைத்துள்ளனர்.


அதாவது ஒரு மனிதனின் எண்ணமும், கேட்கும் பொருள் பற்றிய தெளிவும், அதன் மேல் சரியான தனது கண்ணோட்டமும் (8,16,4) ஒரே நேர்கோட்டில் குவியும் போது கேட்டது கிடைக்கும் என்பதே.


ஆனால் இப்படி சரியாக குவிக்க மனம் நந்நிலையில் இருந்தால் சாத்தியம். முயற்சி செய்து பார்க்க தான் தெரியும். நானும் இங்கே தேடலில் இருப்பவன் தான்.


16,32,64 வினாடி மூச்சை நிறுத்தி பயிற்சி செய்ய விழைவோர் கொஞ்சம் இதை கவனிக்க.

Sunday, June 4, 2023

Vasi yoga in tamil

 திருமூலர் தரும் ரகசிய கணக்கு:-

---------------------------------------------------------



மூச்சை வெளிவிடும்போது தானாகவே விருட்டென்று வெளியேற முயலும். அவ்வாறு வெளியேற விடாமல், மெதுவாக ஊர்ந்து செல்லுமாறு வெளிவிட வேண்டும். அவ்வாறு வெளிவிட வேண்டுமானால் பெருமூளைப் புறணியின் கட்டளை வேண்டும். தானாக நிகழ்கிற செயலைக்கூட மூளையின் கட்டளைக்கு உட்படுத்தும் போது, சோர்ந்திருக்கும் மூளை செயல்பாட்டுக்கு வருவது இந்த முந்நிலை மூச்சுயிர்ப்பின் சிறப்பு.


இங்கு கணக்கிட்டுச் சூத்திரம் தருகிறார் என்குரு திருமூலர்:


ஏறுதல் பூரகம், ஈர்எட்டு வாமத்தால்;

ஆறுதல் கும்பம், அறுபத்து நாலதில்;

ஊறுதல் முப்பத்து இரண்டுஅதி ரேசகம்;

மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே.

                - திருமந்திரம்:568


மூச்சை ஏற்றும்போது, இடது நாசியின் வழியாகப் பதினாறு மாத்திரை அளவுக்கு ஏற்றலாம். புதிய காற்றை உள்விடாமலும் உள்வந்த காற்றை வெளிவிடாமலும் ஆறுதலாக அறுபத்துநாலு மாத்திரை அளவுக்கு நிறுத்திக்கொள்ளலாம். முப்பத்திரண்டு மாத்திரை அளவுக்கு வலது நாசியின்வழியாக மெதுவாக ஊரவைத்து வெளியேற்றலாம். அளவு மாறினால் சிக்கல்.


அடுத்ததாக குதிரைகள் செய்யும் கும்பகத்தை பற்றி சொல்கிறார்...


குதிரைகள் தாவி ஓடுவதற்குக் கூடுதல் ஆற்றல் வேண்டுமென்பதால், கூடுதல் மூச்சை உள்ளிழுக்கின்றன. ஒரு பாய்ச்சலுக்கு ஒரு மூச்சு. பாயும்முன் உள்ளிழுத்த காற்றைப் பாயும்போது உள்நிறுத்துகின்றன; மேலெழுந்த கால்கள் கீழேபடும்வரை தம்மை அறியாமலே கும்பகம் செய்கின்றன. மேலெழுந்த கால்கள் கீழே படும்போதுதான் மூச்சை வெளிவிடுகின்றன. உள்ளிழுத்த அதே அளவு காற்று வெளிவிடப்படுகிறது. ஆற்றலின் தேவை மிகும்போது, உள்ளிழுத்தல், உள்நிறுத்தல், வெளியேற்றலின் அளவும் கூடும்.


புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்

கள்உண்ண வேண்டாம்; தானே களிதரும்;

துள்ளி நடப்பிக்கும்; சோம்பு தவிர்ப்பிக்கும்;

உள்ளது சொன்னோம் உணர்வு உடையோருக்கே.

                       - திருமந்திரம்:566


பறவையைக் காட்டிலும் சிறப்பாகப் பறக்கும் குதிரை. அதை வசப்படுத்தி ஏறிக்கொண்டால், அதைவிடக் களிப்புத் தருவது கள்ளும்கூட இல்லை; சோம்பல் நீங்கி உங்களில் ஒரு துள்ளல் வரும்; உள்ளதைச் சொன்னோம்; உணர்வுடையோர் கேளுங்கள் என்று சொன்னதோடு விடாமல்,


ஈர்ஆறு கால்கொண்டு எழுந்த புரவியைப்

பேராமல் கட்டிப் பெரிதுஉண்ண வல்லீரேல்,

நீர் ஆயிரமும் நிலம்ஆயிரத்து ஆண்டும்

பேராது காயம் பிரான்நந்தி ஆணையே

                  - திருமந்திரம்:722


என்று ஆணையிட்டும் சொல்கிறார். நான்கு கால் குதிரையே மூச்சைப் பிடித்து விண்ணில் எழுகிறது. உங்களுக்குக் கிடைத்திருப்பது பன்னிரண்டு கால் குதிரை அல்லவோ? அந்தக் குதிரையைக் கட்டியாள உங்களால் முடியுமென்றால், ஏது இறப்பு? நீராலும், நிலத்தாலும் பிற பூதங்களாலும் யாக்கப்பட்ட உங்கள் உடம்பு அழியாது.


பன்னிரண்டு கால் புரவி என்பது பன்னிரண்டு விரற்கடை அளவுக்குப் பாயும் மூச்சுக் குதிரை.


இந்தச் சூத்திரத்தைப் பிடித்துக்கொள்ளும் பத்திரகிரியார்.....


பன்னிரண்டு கால்புரவி

பாய்ந்துசில்லம் தப்பாமல்

பின்னிரண்டு சங்கிலிக்குள்

பிணைப்பதுஇனி எக்காலம்?

           - பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல்:141


என்று ஏங்குகிறார். பன்னிரண்டு கால் குதிரை பாய்வதில் சிக்கலில்லை; பாயும் வேகத்தில் சிதறிச் சில்லாகிவிடாமல் கணக்காகப் பாயப் பழக்கவேண்டாமா? இடம் வா என்றால் இடம் வரவும், வலம் வா என்றால் வலம் வரவும், நில்லென்றால் நிற்கவும் வேண்டாமா? குதிரை பழக்கிக் கடிவாளம் போடுவது எக்காலம்?

Friday, February 24, 2023

Who is God Tamil

 "இறை ஆற்றல் எல்லாமாக இருக்கிறது. எனவே எனக்கும் இறையாற்றளுக்கும் ஒரு சங்கிலிப் பிணைப்பு இருக்கிறது. அதே மகாசக்தியாகிய இறையாற்றல் சங்கிலிப்பிணைப்பாக நானுமாகவும் இருக்கிறது.  அந்த சங்கிலிப்பிணைப்பாகிய அதன் ஒரு முனை தான் 'நான்'. இன்னொரு முனை தான் அந்த தெய்வீகப் பேராற்றல் என்று எண்ணும் போது அந்தச் சங்கிலியைப் போட்டு விட்டு அவரை எங்கே போய்த் தேடினால் கிடைப்பார்?


"கடவுள் + (ஆணவம், கன்மம், மாயை ) = "மனிதன்".

"மனிதன் - (ஆணவம், கன்மம், மாயை ) = "கடவுள்".

God + Impurities = Man;

Man - Impurities = God".


இதுவரையில் எல்லாவற்றையும் பார்த்து ரசித்து வாழ்ந்தவன் தனது மூலம் என்ன என்று தன்னையே திரும்பிப் பார்க்கிற நிலையே அறிவின் உயர்ந்த நிலை. அறிவையே அறிந்து கொள்ளக்கூடிய அறிவின் உயர்ந்த நிலை "ஆறாவது அறிவு".


பார்ப்பவன் யார் எனப் பார்ப்பவன் தான் பார்ப்பனன் - யோகி.

அதற்கும் மேலாக பிரம்மத்தை அறியும் போது பிராமணன் எனப்படுகிறான்.


எல்லாம் இறைநிலைதான். நானும் இறைநிலைதான்... என்று சொல்லிக் கொண்டு அதை வாழ்க்கையில் பயன் படுத்தாவிட்டால் அதை வறட்டு வேதாந்தம் என்று கூறுவார்கள்.


எல்லாப் பொருட்களிடத்தும் எல்லா உயிர்களிடத்தும் இறை நிலையைக் காண வேண்டும். அப்படி காணக்கூடிய அளவு அறிவிலே உயர்வு பெற வேண்டும்.


அன்பு வேறு இறைநிலை வேறு அல்ல. "உண்மையிலேயே மெய்ப்பொருளை உணரும் போதுதான் கருணை பிறக்கும்".

Monday, February 13, 2023

Atma zhanam

 .      வின்னையும் தான்டும் ஆத்மஞானத்தின் மகிமை 

      ஆத்ம ஞானத்தின் பெருமையும், மகிமையும், நன்மையும் எண்ணில் அடங்காதவை !!!

       சில சூழ்நிலைகளில் மனிதனுக்கு எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு ஒரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டு, அவனுக்கு "எதிர்பார்க்க முடியாத *உச்சகட்ட துன்பமும்* அனுபவிக்க நேரிடுகிறது !!!

     போர்க்களத்தில் செய்வதறியாது தவிக்கும் நிலை, அர்ஜுனனுக்கு  ஏற்பட்டது போல, *நாமும் சொல்லெனாத் துயரை அனுபவித்த* பின்னரே  ஆத்ம ஞானத்தை பெறுகின்ற *தகுதியை* அடைவோம் !!!

     எனவே, *இறைவன் தரும் பெருந்துன்பங்களை விருப்பமுடனும் பொறுமையுடனும் ஏற்க கற்றுக் கொள்ள வேண்டும்" !!!

ஆத்மஞானமே மனித லட்சியம் :

------------------------------------

       *ஒருவன் எவ்வளவுதான் கல்வியறிவு பெற்றிருந்தாலும், கௌரவமான உத்தியோகம் கிடைத்திருந்தாலும், நல்ல மனைவி பிள்ளைகள்  கிடைத்து இருந்தாலும்*, அவ்வளவு ஏன்? ... *வேறென்ன வெல்லாமோ கிடைத்து இருந்தாலும்*, இன்னும் சொல்லப்போனால், உலகளவில் முதல்நிலை பணக்காரனாக இருந்திருந்தாலும் கூட , அவன் ஆத்ம ஞானத்தை பெற வில்லை என்றால், அவன் வாழ்வின் இறுதிவரை கவலைகளோடு தான் வாழ வேண்டும் !!! அவன் மீண்டும் பிறவா வரம் பெற முடியாது !!! பிறவிப் பயனையும் அடைய முடியாது !!! 

       *அதுமட்டுமல்ல !!! கோடி கோடி மாந்தர்கள் ஆத்ம ஞானத்தை அடையாமலே மரணிக்கிறார்களே அவர்களும், மீண்டும் பிறவி எடுக்க வேண்டி வரும் !!! மனிதப் பிறவியில் ஒரு முறை மரணிப்பதற்கே இவ்வளவு பயப்படுகின்றோமே !!! ஆனால், 21 லட்சம் வகையான விலங்கு பிறவிகளிலேயும் 21 லட்சம் தடவை, பிறந்த பிறந்து மீண்டும் மீண்டும் இறந்து இறந்து மரணிக்க வேண்டி வருமே, அந்த சரீர கஷ்டத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை அல்லவா? பிறவா வரம் பெறுவதற்கு மட்டுமே மனித பிறவி எடுத்து வந்துள்ளோம் என்று நாம் உணர வேண்டும் !!!

       *ஒருவன் நற்குணங்களோடும் உண்மையான பக்தியோடும் சிறந்த ஆன்மிகத்தோடும் இறைவனை தினமும் வழிபடுபவனாக இருந்தாலும் கூட , மொத்தத்தில், அவன் மிக மிக நல்லவனாக வாழ்ந்திருந்தாலும் கூட அவன் சேர்த்து வைத்த புண்ணியங் களை தீர்ப்பதற்காகவாவது அவன் மீண்டும் பிறவி எடுக்க வேண்டி வரும் !!!*

       *ஆத்ம ஞானத்தை அடையாத காரணத்தால், அந்த நல்லவனும் கூட , இவ்வுலகத்தாரை போல, இறக்கும் வரை கவலையோடு தான் வாழ வேண்டும். உடலை விட்ட பின்பும் மறுபிறவி எடுக்க செல்ல வேண்டும். மொத்தத்தில், அவன் மனிதனாகப் பிறந்தே பயனில்லை !!!

ஆத்மஞானம் யாருக்கு கிட்டும் ?

-----------------------------------

      மது, மாது, சுவையான-உணவு, எப்போதும்-உறக்கம், போதை, மயக்கம் என புலனின்பங்களில் மூழ்கி இருப்போருக்கு  எந்த ஞானமும் நிச்சயம் தித்திக்காது !!!

       அதே சமயம், *ஆத்ம ஞானத்தை அறிய வேண்டும் என்கிற ஆவலும் விருப்பமும் கூட  அவ்வளவு சுலபமாக ஒருவனுக்கு வந்து விடுவதில்லை !!!*

       Basically, *நற்குணங்களோடு நல்லவர்களாக வாழ்பவர்களில் சிலருக்கே ஆத்மஞானம் அடைய வேண்டும் என்கிற விருப்பம் வரும் !!!*

       *அந்த சில நல்லவர்களில், ... எந்த ஒரு சிலர், இவ்வுலகத்தின் மீதும் இவ்வுலகத்தார்கள் மீதும், 'எந்த வெறுப்பும்' இல்லாமல் இருக்கின்றாரோ அவரே, ஆத்ம ஞானம் பெறத் தகுதியுள்ளவன்*

ஆத்மஞானம் ஏன் மனிதனுக்கு தேவை?

--------------------------------------

       *ஆத்ம ஞானத்தை பெற வேண்டும் என்கிற காரணத்திற்காகவே நாம் மனிதனாக பிறந்து இந்த பூமிக்கு வந்திருக்கிறோம் !!!*

       *ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை

நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்

வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்காள்

கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

      விளக்கம் : தம்முள்ளே உட்கலந்த உயிரான, இறைவனை, அறிவதன் மூலம், மீண்டும் பிறவா நிலை பெறுவதை விட்டுவிட்டு, மனிதர்கள், அகிலமெங்கும் தேடி ஓடி நாடி வாடி இறந்து போகின்றனரே.

      கோடிக்கணக்கான மக்கள் ஆத்ம ஞானத்தை அடையாமல் நம் கண் முன்னே இறந்து கொண்டே இருக்கின்றார்கள் !!! அவர்கள் யாவரும் மனித பிறவியை வீணாக்கியவர்கள் !!!

       *உண்டு-உறங்கி, உடல் வளர்த்து,  விலங்கு போல மடியும்  எண்ணற்ற மானிடர்களைப் போல, நீயும் உனது மேன்மையான மனிதப் பிறவியை  வீணாக்க கூடாதல்லவா*?

ஆத்ம ஞானத்தைப் பெற தகுதி :

----------------------------------      

      பகவத் கீதை பற்றிய கருத்துக்களை கொண்ட எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்தமானதாய் இருப்பதன் மூலம், நீங்கள் ஆத்ம ஞானத்தை பெற தகுதி உள்ளவர்கள் என உணர வேண்டும் !!!

       *கவலையற்று வாழ வேண்டுமா? நிரந்தர சந்தோஷத்தோடு வாழ வேண்டுமா?, பிறவிப் பயனைப் பெற வேண்டுமா*?  ஆத்ம ஞானத்தை அடைவதே மனித இலக்கு என உணர்ந்து அதை அடைய முற்படுவோம் !!!*


ஆத்மஞாணி பெறும் நன்மைகள் :

------------------------------------

      *உயிர் எனப்படும் ஆன்மாவின் மேன்மையான ஞானங்களே அதைப் பெற்றிருக்கும் ஞாணியின் நன்மைகள்*

      *நிலநீர் தீக்காற்றாகாயம் என ஐம்பூதங்களாலும் ஆத்ம ஞானியை வீழ்த்த முடியாது !!! ஏனெனில்

 ஆத்மாவை யாராலும் எதனாலும் 

 அழிக்க முடியாது" !!! 

      *வீழ்த்த முடியாத ஆத்மஞாணிக்கு எதிரிகளே இருக்க முடியாது* !!! 

      *எதிரிகளே இல்லாத ஆத்மஞாணிக்கு  பயமில்லை*!!!

      *எதற்கும்  பயப்படாத ஆத்மஞாணிக்கு எந்த கவலையும் இல்லை* !!!

      *கவலையற்ற ஆத்மஞாணி நிரந்தர சந்தோஷத்தில் இருப்பான்*.

      *நிரந்தரமாக என்றும் இருக்கின்ற ஆத்மஞாணிக்கு மரணமே இல்லை* !!!

      *மரணமில்லாத ஆத்மஞாணிக்கு மரணபயம் எவ்வாறு இருக்க முடியும்* ?

      *ஐம்பூதங்களாலும் வீழ்த்த முடியாத" ... *எதிரிகளே இருக்க முடியாத* ... *பயமில்லாத*... *கவலையற்ற* ... "மரணமற்ற* ... *மனிதனாக உன்னை நீ உணர வேண்டுமா*?

      *அதற்கு நீ செய்ய வேண்டிய தெல்லாம் ஆத்மாவின் ஞானங்களை அறிய வேண்டும். அத்தனை ஞானங்களையும் தன் ஞானங்களாக உணர வேண்டும் !!! உணர்ந்த ஞானங்கள் மனதில் நிலைக்க வேண்டும் !!! நிலைத்தபின், நீயே ஆத்மஞாணி* !!! 

*ஆத்ம ஞானத்தின் மகிமை* !!!

-------------------------------

      மனிதன் எந்த ஞானத்தை பெற்றாலும் அதைவிட சிறப்பான ஒரு ஞானம்  இருக்கத்தான் செய்கிறது !!!

      மனிதன் எவ்வளவு எண்ணிக்கையில் ஞானத்தைப் பெற்றாலும்,  மேலும் அடைவதற்கு  ஞானங்கள் இருக்கத்தான் செய்கிறது !!!  *கற்றது கைமண்ணளவு அல்லவா*?

*ஞானங்களில் சிறந்தது ஆத்மஞானம் : 

      *மனிதனுக்கு கிடைப்பதற்கரிய ஞானங்கள் *அத்தனையிலும், பிரதானமானது ஆத்ம ஞானமே !!!*

      *எந்த ஒரு ஞானத்தை  நீ பெற்றால், அதற்கும் மேலான சிறந்ததொரு ஞானத்தை நீ பெற வேண்டியதில்லை  என்கிற மனநிறைவை உனக்கு  தருகிறதோ அந்த ஞானமே ஆத்ம ஞானமாகும்" !!!

      எந்த ஒரு ஞானத்தை  நீ பெற்றால், *உன்னை ஐம்பூதங்களாலும் வீழ்த்த முடியாதோ* ... 

      *எந்த ஒரு ஞானத்தை  நீ பெறுவதால்

உனக்கு எதிரிகளே இல்லையோ* ...

      "எந்த ஒரு ஞானத்தை  நீ பெறுவதால்

உனக்கு பயமே இல்லையோ* ...

       "எந்த ஒரு ஞானத்தை  நீ பெறுவதால்

உனக்கு கவலையே இல்லையோ* ...

      "எந்த ஒரு ஞானத்தை  நீ பெறுவதால்

உனக்கு மரணமே இல்லையோ* ...

      "எந்த ஒரு ஞானத்தை  நீ பெறுவதால்

உனக்கு மரணக் கவலையே/ மரணபயமே  இல்லையோ* ...  "அதுவே ஆத்மஞானத்தின் பலனாகும்" !!!

எதுதான் அந்த ஆத்மஞானம்?

-------------------------------

      அதெல்லாம் இருக்கட்டும் !!! ஆத்மாவைப் பற்றிய அந்த ஞானம்தான் எது ? இதுதானே உங்கள் கேள்வி ?

      எனக்கு எப்போதும் கவலையற்ற நிலையை தருகின்ற அந்த ஆத்ம ஞானம் தான் எது?

     மீண்டும் பிறவா வரத்தை தருகின்ற அந்த ஞானம் தான் எது?

     மனிதனாகப் பிறந்து இருக்கின்ற இந்த மனிதப் பிறவியின் பயனை அடைவதற்கு உதவுகின்ற ஞானம் எது?

      இதுதானே உங்கள் கேள்வி?

      பசித்தபின் உண்ணும் உணவில் தான் சுவை இருக்கும் !!!

      *ஆத்ம ஞானத்தைக் பெற்றே ஆக வேண்டும் என்கிற தாகத்தை உங்களுக்குத் தந்து, தங்கள் அறிவுப் பசியை இப்போது தூண்டி இருக்கின்றேன் !!!*

      

Thursday, February 9, 2023

Sithargal secrets About human body

 சித்தர்களின் பாடல்களில் அவர்கள் ரசனையைப் பற்றி பேச வார்த்தைகளே இல்லை. எளிய சொற்களுக்குள் உலகத் தத்துவங்களையே மறைபொருளாக வைத்து அவர்கள் பாடுகிற பாங்கு அற்புதத்திலும் அற்புதம்....


இந்த உடலைக் குறித்து சொல்லும் போது,
         பராபரத்தில் பரம் தோன்றி,
         பரத்தில் சிவம் தோன்றி,
         சிவத்தில் சக்தி தோன்றி,
         சக்தியில் நாதம் தோன்றி,
         நாதத்தில் விந்து தோன்றி,
         விந்துவில் சதாசிவம் தோன்றி,
         சதாசிவத்தில் மகேஸ்வரன் தோன்றி,
         மகேஸ்வரனில் ருத்திரன் தோன்றி,
         ருத்திரனில் விஷ்ணு தோன்றி,
         விஷ்ணுவில் பிரம்மா தோன்றி,
         பிரம்மாவில் ஆகாயம் தோன்றி,
         ஆகாயத்தில் வாயு தோன்றி,
         வாயுவில் அக்னி தோன்றி,
         அக்னியில் அப்பு தோன்றி,
         அப்புவில் பிருதிவி தோன்றி,
         பிருதிவியில் அன்னம் தோன்றி,
         அன்னத்தில் ரஸம் தோன்றி,
         ரஸத்தில் உதிரம் தோன்றி,
         உதிரத்தில் மாமிசம் தோன்றி,
         மாமிசத்தில் மேதை தோன்றி,
         மேதையில் அஸ்தி தோன்றி,
         அஸ்தியில் மச்சை தோன்றி,
         மச்சையில் சுக்கிலம் தோன்றி,
         சுக்கிலத்தில் சுரோணிதம் தோன்றியது....

சுக்கிலமானது சுரோணிதத்துடன் கலந்து
ஜலமயமாகிப் பின்
(1) ஏழாம் தினத்தில் குமிழியாகி,
(2) முப்பதாம் நாள் உதிரம் திரண்டு பிண்டமாகி,
(3) அறுபதாம் நாள் அப்பிண்டத்திற்கு அச்சு (சிரசு)உண்டாகி,
(4) தொண்ணூறாம் நாள் மாமிசம் திரண்டு மூட்டு (கை, கால்கள்) உண்டாகி,
(5) நூற்று இருபதாம் நாள் தண்டமாய்
நரம்பு, நாடி(கை, கால்களில் விரல்கள்) உண்டாகி,
(6) நூற்றி ஐம்பதாம் நாள் நவத்துவாரங்களும் உண்டாகி,
(7) இரு நூற்றுப் பத்தாம் நாள் பிராணன் உண்டாகிக் கர்பத்தை சூழ்ந்து புரளும்.
(8) இருநூற்று நாற்பதாம் நாள் மற்ற அவயங்கள் உண்டாகி நீட்டி, முடக்கி, தாயுண்ட அன்ன சாரத்தை தொப்புள் வழியாக உண்டு, பிள்ளையினுடைய உடல் வளர்ந்து தாயுடன் தோன்றி உயிருடன் ஆடும்.
(9) இருநூற்றி எழுபதாம் நாள் தலை முதல் கால் வரை ரோமத் துவாரம் உண்டாகி, அறிவுக் கண் திறந்து,
(10) முன்னூறாவது நாள் மலை மேலிருந்து தலைகீழாய் விழுவது போல், நிறைந்த பிண்டமாய் அபானனின் பலத்தினாலே
பூமியில் ஜெனிக்கும் குழந்தை, நாடி, நரம்பிகளும், ஆறாதாரமும்,? ஐந்தெழுத்தும்,
ஐம்பத்தோரு அட்சரமும், பஞ்சபூத
தேவதைகளும் தூலச் சூக்குமத்துள்ளே
கொழுந்துவிடப் பேதையாம்......

கருவானது தன் செவ்விய இளங்காலை
முடக்கித் தலையுடன் சேர்த்து, ஓம் வடிவமாக
அமைந்திருக்கும் கருப்பைக்குள் சுமையாக
நின்று, வெளியேறத் திருவுள்ளங் கொண்டு,
முந்தித் தவம் கிடந்து, அன்னையின் வயிற்றில் நீங்கும் சுமையாகக் காத்திருக்குமாம்.....

இதையே திருமூலர்,
அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்பு
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.
                 - பாடல் எண் 452.

திருமூலர் அருளிய திருமந்திரத்தில், எட்டாம்
தந்திரத்தில் இடம் பெற்றுள்ள "காயப்பை'
என்னும் பாடலில் பல நுட்பங்கள்
அடங்கியுள்ளன.

காயப்பை ஒன்று சரக்குப் பலவுள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக் குள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மன்னா மயங்கிய வாறே.
               - பாடல் எண்2122

நம் உடம்பில் பல்வேறு "பை'கள் உள்ளன.
அவற்றுள் முதல் பை காயப்பை. அதாவது, புற
உடம்பாகிய தூல உடம்பைக் காயப்பை என்பர்.

அவற்றுள் இரண்டாவது பை மாயப்பை. மாயம்
என்பதற்கு மறைந்து எனப் பொருள் கொண்டு
மறைந்திருக்கும் சூக்கும உடம்பு என்பர்.
மூன்றாவது ஆனந்த மயகோசம் என்கின்ற
மற்றுமோர் பையாகும்.

இந்தப் பாடலில் வந்துள்ள சரக்குப்பலவுள
என்பதன் விளக்கத்தைத் திருமூலர் "இரதமும்'
எனத் தொடங்கும் பாடலில் (2125)
குறிப்பிட்டுள்ளார். அதன்படி இரதமும்,
உதிரமும், இறைச்சியும், தோலும், மேதையும்,
அத்தியும், வழும்பும், மச்சையும்,
சுக்கிலமும் ஆகிய ஒன்பதும் காயப்பையில்
உள்ள ஒன்பது சரக்குகளாம்.

(1) இரதம் - உண்ட உணவின் சாரம்
(2) உதிரம் - இரத்தம்
(3) இறைச்சி - உதிரம் பரவுவதற்கு இடமான
தசையும் நாரும்
(4) தோல் - ஊனை உள்வைத்துப் பாதுகாப்பாய்
மூடியிருப்பது
(5) மேதை - அறிவு விளக்கத்திற்குப்
பயன்படும் மூளைப் பகுதியை சுற்றியுள்ள
வெள்நிணம். இது நீர்மையானது. (சிலர்
கொழுப்பு என்பர்)
(6) அத்தி - எலும்பு
(7) வழும்பு - நிணத்திலிருந்து ஊறும்
வெண்மையான நீர்
(8) மச்சை - எலும்புக்குள்ளே ஓடும்
வழுவழுப்பான திரவம்
(9) சுக்கிலம் - வெண்ணீர் (பெண்களுக்குள்ள
சுரோணிதம்)

காயப்பை என்னும் தூல உடம்பில் உள்ள
ஒன்பதும் சரக்கும் சேர்ந்து உடல் எனக்
கொள்ளப்படுகிறது

ஏழு தாதுக்கள் என்பது  எதனால்?
உணவிலிருந்து,
ரத்தத்திலிருந்து மாம்ஸம்,
மாம்ஸத்திலிருந்து கொழுப்பு கொழுப்பிலிருந்து நரம்புகள்,
நரம்பிலிருந்து எலும்புகள்,
எலும்பிலிருந்து ஊன்,
ஊனிலிருந்து சுக்ரம்,
            இப்படி ஏழு தாதுக்கள் அவற்றால் ஆனது சரீரம், சுக்கிரமும் சோணிதமும் சேர்ந்தால் கர்ப்பம் உண்டாகிறது.பிஅதை இயக்குமிடம்
இதயம். இதயத்தினுள் ஒரு அக்னி
உள்ளது. அதில் பித்தமும், பித்தத்திலிருந்து
வாயுவஜம் தோன்றுகிறது. அந்த வாயு மீண்டும் கிரமமாக இருதயத்தை நாடுகிறது. இது இறைவனின் நீதி.

யஜுர்வேதம்
…..கர்ப்போபநிஷத்1.4ருதுகால சம்போகத்தால்
ஓரிரவு கழிந்ததும் கருவானது கலங்குகிறது. ஏழிரவுகளில் நீர்க்குமிழி போன்ற உருவத்தை அடைகிறது.
அரை மாதத்தில் பிண்டமாகிறது.
ஒரு மாதத்தில் அது கடினமாகிறது.
இரண்டு மாதத்தில் தலை தோன்றுகிறது.
மூன்று மாதங்களில் பாதங்களின் பிரதேசம் தோன்றுகிறது.
நாலாவது மாதத்தில் மணிக்கட்டு வயிறு, இடுப்பு முதலிய பிரதேசங்கள் உண்டாகின்றன.
ஐந்தாவது மாதத்தில் பின்புறம் (மூங்கில்
போன்ற முதுகு) எலும்பு உண்டாகிறது.
ஆறாவது மாதத்தில் வாய், மூக்கு கண்கள், காதுகள்  உண்டாகின்றன.
ஏழாவது மாதத்தில் ஜீவனுடன் கூடுகிறது. எட்டாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும் பூர்த்தியாகின்றன.
      தந்தையின் வீர்யம் அதிகமாயிருந்தால்
புருஷனாகவும், தாயின் வீர்யம்
அதிகமாயிருந்தால் ஸ்திரீயாகவும், இரண்டும்
சமமாக இருந்தால் அலியாகவும்
ஆகிறது. மனக்கலக்கத்தோடு இருந்தால்
குருடர்களாகவும்,முடவர்களாகவும், கூனர்களாகவும், குள்ளர்களாகவும்
பிறக்கிறார்கள். ஒன்றுக்கொன்று வாயுவினால் பீடிக்கப்பட்டு சுக்லம் இரண்டுபட்டால் அப்போது இரட்டை பிள்ளைகள் பிறக்கிறார்கள்.

யஜுர்வேதம்….. கர்ப்போபநிஷத் 3கர்பத்தில்
இருக்கும் போது தாயார் உண்டதும்
பருகியதும் தாயுடன் இணைந்து நாடிகளில்
பரவி அதன் மூலம் குழந்தையின் பிராணனை
திருப்தியடைகிறது. பிறகு ஒன்பதாவது
மாதத்தில் எல்லா லக்ஷணங்களும்
ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும்
பரிபூரண நிலையை அடைகின்றன. அப்போது
அந்த ஜீவனுக்கு முந்திய பிறவியின் ஞாபகம்
வருகிறது. தான் செய்த புண்ணிய
செயல்களையும், பாபச்செயல்களையும்
உணர்கிறது. முன்பு என்னால் ஆயிரக்கணக்கான யோனிகள் பார்க்கப்பட்டும், பலவிதமான ஆகாரங்கள் புசிக்கப்பட்டும், பலவிதமான ஸ்தன்ய பானங்கள்(தாய்ப்பால்) பருகப்பட்டும் ஆகிவிட்டன.
         திரும்பத்திரும்ப பிறந்தும் இறந்துமாயிற்று. நல்லதோ பொல்லாததோ
எந்த கருமம் எந்த சுற்றத்தின்ன் பொருட்டு
என்னால் செய்யப்ட்டதோ அந்த உற்றார்
பயனை அனுபவித்துவிட்டு போய்விட்டார்கள்.

நானோ தன்னந்தனியாக அதனால் தவிக்கிறேன். யோனியினின்று வெளிவந்தால் இனி நான் பாவத்தை போக்குபவரும் கருமப்பயனிலிருந்து முக்தியளிப்பவரும்மான மகேஷ்வரனை நாராயணனை சரணடையப்போகிறேன். யோனியிலிருந்து வெளிவந்தால் இனி நான் பாபத்தை போக்குவதும் கருமப் பயனிலிருந்து விடுதலையளிப்பதுமான ஞானமார்க்கத்தை அப்பியாசம் செய்வேன்.யோனியிலிருந்து வெளிவந்தால் பிரம்மத்தை தியானிப்பேன் என்று எண்ணுகிறான். பிறகு யோனித்துவாரத்தை அடைந்து இயந்திரத்தால் பீடிக்கப்ட்டவனைப்போல மிகுந்த துன்பத்திற்குள்ளாகி பிறந்தவுடன் விஷ்ணுமாயா வாயுவால் தொடப்பட்டு நினைவிழந்து முற்பிறவியையோ புண்ணிய
பாபச்செயல்களையோ எதையும் அறிவதில்லை.

அறு கோண நட்சத்திர சிவ தத்துவம் (contemporary shape of shivalinga) இதை உருவாக்கியவர் முருகன், இதைத்தான் சிவனுக்கு உபதேசித்ததாக கூறுவர். இதனால் தான் ஆறுமுகன் என்று அழைக்கப்படுகிறார், விந்துவை யோக சக்தி (metaphysics) யால் உணர்ந்து அதன் வடிவத்தில் தான் வேல் உருவாக்கினார். அதனால் தான் வேல்தன்.. வேந்தன் என்றழைக்கப்பட்டார்... காமம் இல்லாமல் முனிவர்களின் பிறப்பேது?, எல்லாமே இறை என்றபின் முகம் சுழிக்க வேண்டிய எண்ணம் எப்படி ..




Ladies finger Benefits

 

*வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!* 

💫💫💫💫✨💫💫💫💫


"வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும். கணக்கு நல்லா போடலாம்...’’ என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளுக்கு ஊட்டும் அம்மாக்களைப் பார்க்கலாம். வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடியானத் தொடர்பு இருக்கிறதோ, இல்லையோ அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி என்பதில் சந்தேகம் வேண்டாம். வெண்டைக்காயில் வைட்டமின் சி, கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம் மற்றும் இரும்பு சத்து போன்ற சத்துக்கள் இருக்கின்றன. வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதிக்கரை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது. இன்று தமிழகத்தில் அதிகம் விளையும் காய்கறிகளில் ஒன்றாகிவிட்டது. 


‘கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. கர்ப்பத்தில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்புக் குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக் அமிலமானது மிகவும் அவசியம்.

‘வாயோ வெண்டைக்காய், கையோ கருணைக்கிழங்கு...’ என்று ஒரு பழமொழி உண்டு. வெண்டைக்காயைப்போல வளவளவென்று பேசி கருணைக்கிழங்கைப் போல எரிச்சலூட்டும்படி நடப்பவர்களை வேடிக்கையாகக் குறிப்பிடுகிறது இந்தப் பழமொழி. வெண்டைக்காய் வளவளப்பானது மட்டுமல்ல, பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அற்புத மருத்துவத்தன்மை நிறைந்தது. 


வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்டது என்பதால், அது பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது. அதிலுள்ள பெக்டின் (Pectin) மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்குக் காரணம். பெக்டின் மற்றும் கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். 


 *வெண்டைக்காய் தண்ணீர் செய்முறை:* 


இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காயைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை எழுந்ததும் அந்த நீரைப் பருக வேண்டும். வெண்டைக்காய் நீரை வெறும் வயிற்றில் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.


 *எலும்புகள் வலிமை பெற:* 


நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த இந்தத் திரவத்தை அருந்தினால் நீரிழப்பு தடுக்கப்படுவதுடன் உடல் குளுமை பெறும். இதில் உள்ள ஃபோலேட், எலும்புகளை உறுதியாக்கி, ஆஸ்டியோபொரோசிஸ் (Osteoporosis) பாதிப்பைக் குறைக்கிறது. எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் இந்த வெண்டைக்காய் ஊறிய நீரை அருந்துவது நல்லது.


 *இரத்தசோகை குணமாக:*  

 

வெண்டைக்காயில் வைட்டமின் சத்துக்கள் அதிகம் இருப்பதால், இது இரத்தசோகையை குணப்படுத்துகிறது. இந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் இரத்த செல்கள் உற்பத்தி ஆகின்றன. அதுபோல இரத்தசோகை வராமல் தடுக்கிறது.


 *வயிறு தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய:* 

 

இந்த வெண்டைக்காய் நீரை தினமும் காலையில் குடித்து வருவதால் நமது உடலில் இருக்கும் நச்சுக்களை (Toxins) நீக்கி உணவு செரிமானத்தை சீராக்கி வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் செய்கிறது. வயிற்று வலி, வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகளை சரி செய்கிறது. 


மேலும் இந்த நீர் பசி உணர்வை தூண்டுகிறது. பசி எடுக்கவில்லை என்று கூறுபவர்கள் இந்த நீரை குடித்து வந்தால் நல்ல பலனளிக்கும்.


 *தொண்டை வறட்சி ஏற்படாமல் தடுக்கின்றது:* 


தொடர் இருமல் வரட்டு இருமல் இருப்பவர்கள் தொடர்ந்து வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.


 *நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடைய:* 


வெண்டைக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி நிறைந்துள்ளன. எனவே, வெண்டைக்காய் நீரை தொடர்ந்து குடித்து வரும் பொழுது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி சளி, இருமல் வருவதும் தவிர்க்கப்படுகிறது.


 *சுவாசக் கோளாறுகள் நீங்க:* 


வெண்டைக்காய் ஊறவைத்த நீர் சுவாச பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இந்த நீரை தொடர்ந்து குடித்து வருவதால் மூச்சிரைப்பு, ஆஸ்துமா, சைனஸ் போன்ற சுவாசம் சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகிறது. 

வெண்டைக்காயைப் பால் சேர்த்து வேக வைத்தும் குடிக்கலாம். 


 *இதய நோய்களை தடுக்க:* 


வெண்டைக்காய் நீரை ஒருவர் தினமும் பருகி வந்தால், கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். 


 *பெருங்குடலை சுத்தம் செய்ய:* 

 

வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள், பெருங்குடலின் உள்பகுதியில் படிந்து பெருங்குடல் சிறப்பாகச் செயல்படவும் உதவும். பெருங்குடல் பாதையை சுத்தம் செய்து வயிற்றுப்புண் மற்றும் மலச்சிக்கலைப் போக்கி, குடலைப் பாதுகாப்பதுடன் மலக்குடலில் வரும் புற்றுநோயைத் தடுக்கவும் உதவும்.  


 *கண்பார்வை மேம்பட* :


வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் பார்வைக் குறைபாடு நீங்கும். வெண்டைக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், கேட்டராக்ட் மற்றும் க்ளாக்கோமா பிரச்னைகளைத் தவிர்க்கக் கூடியது.


மேலும் வெண்டைக்காயைப் பச்சையாக மென்று சாப்பிட்டால் பற்கள் தூய்மை பெறுவதுடன் ஈறுகளில் ரத்த ஓட்டம் தூண்டப்படும்; ஈறு தொடர்பான நோய்கள் சரியாகும்.


 *குறிப்பு* :


“வெண்டைக்காயில் ஆக்சலேட்  அதிகமுள்ளது. இது சிறுநீரகம், பித்தப்பைக் கற்களை வளரச் செய்துவிடும். கல் பிரச்னையுள்ளவர்கள் வெண்டைக்காயைக் குறைவாகச் சாப்பிட வேண்டும். வெண்டைக்காயை அதிகமாக வதக்கினால் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். லேசாக வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும்” என்கிறார் இயற்கை மருத்துவர் ஜீவா சேகர்.


.


“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு” 


என்று கூறுகிறது திருக்குறள். எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...