Monday, November 14, 2022

Sithargal wisdom

 ஈருடலின் எச்சத்தில் பிறந்த ஓருடல் பிண்டம் இது...   தன்னலம் கருதி தாங்கிப்பெற்றாள் தாயென்று ஆனாளே... ஒருவள் பெற்ற சரீரங்கள் சகோதர சகோதரிகளாமே.... அப்பனில்லை ஆத்தாளில்லை, அண்ணனில்லை தங்கையில்லை, அந்தரத்தில் அநாதியாகி நின்ற பின்னே.... அப்பனும் கெஞ்சுவானோ, ஆத்தாளும் அழுவளோ, அண்ணனும் அதட்டுவானோ, தங்கையும் தேம்பியழுவாளோ.... அப்பனும் ஆத்தாளும் அவனாகி,  அனைத்து உறவும் அதுவாகி, வெட்டவெளிதனிலே வெளையாட போகும் போது,, உறவோடுவந்து ஒரு மாயை தடுக்குமே... யோனிகுழியுல புதையும் போகம் வேண்டாம்.... பொன்பொருளோடு வாழும் யோகம் வேண்டாம்.... பொழுதுபோக்கில் களிப்போடு வாழும் தாகம் வேண்டாம்.... பரதேசியாய் இருந்து பரம்பொருளாகிடும் பரமானந்தம் போதுமே.... கன்னிக்குழியும் மாயையடா... புறத்திலே சுகம்தேடும் புலையனே, பரத்திலே பரமசுகம் உள்ளதடா.... பெண்ணழகை வர்ணிக்கும் பித்தனே,, உன்னழகை உள்ளிருந்து நீ காணடா.... உடலெடுத்து உயிரெடுத்த ஓர்கடவுள் நீயடா.. நீ உன்னிலிருந்து உன் உள்ளிருந்து உணரடா.....

No comments:

Post a Comment

Human body secrets

*உங்கள் உடல்... (Thanks to..Vrk Samy) உங்கள் உடல் 37 டிரில்லியன் செல்களை 200 வகைகளாகப் பிரிக்கிறது. 100 பில்லியன் செல்கள் தோலை உருவாக்குக...